தேடுதல்

திருத்தந்தை : நம் இறுதி குறிக்கோள் தந்தையின் இடமே

தந்தையின் இல்லத்தில் அனைவருக்கும் இடம் உள்ளது, அனைவருக்கும் இடம் ஏற்பாடு செய்யவே தான் செல்வதாகவும் உரைக்கிறார் இயேசு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மே 07 ஞாயிற்றுக்கிழமையன்று புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மககளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் இறப்பதற்கு முன்னர் இயேசு வழங்கிய இறுதி உரையை மையமாக வைத்துத் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தந்தையின் இடமாக இருக்கின்ற இல்லத்தில் நாம் எப்படிச் செல்லவேண்டும் எங்கு செல்லவேண்டும் என விவரிக்கும் இயேசு, தந்தையின் இல்லத்தில் அனைவருக்கும் இடம் உள்ளது, அனைவருக்கும் இடம் ஏற்பாடுச் செய்யவே தான் செல்வதாகவும் உரைக்கிறார்.

நமக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும் இயேசு நம்மை விட்டு விலகிச் செல்லவில்லை மாறாக, நம் இறுதி இடத்திற்கான பாதையை திறப்பதற்காகச் செல்கிரார், ஏனெனில் நம் இறுதி குறிக்கோள் தந்தையின் இடமே என எடுத்துரைத்தார்.

உண்மையில் வாழ்வு மற்றும் வாழ்வை அபரிமிதமாகப் பெறவும் நாம் இயேசுவோடு இணைந்து நடைபோடவேண்டியது அவசியம் என்பதையும் வலிறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்முடைய பயணம் இயேசுவோடு இணைந்ததாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 May 2023, 13:07

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >