தேடுதல்

வானக அரசியே வாழ்த்தொலியுரை - 230521 வானக அரசியே வாழ்த்தொலியுரை - 230521 

மனம், மற்றும் இதயத்திற்கு வாழ்வை வழங்கும் தூய ஆவியார்

திருத்தந்தை : இறைவன் நம் இதயக் கதவுகளைத் திறந்து, தூய ஆவியாரை அனுப்பி, நம்மை புதிய படைப்பாக்குகிறார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

ஆற்றலோடு, சுதந்திரமாக வீசும் காற்றைப்போன்று விளங்கும் தூய ஆவியாரின் செயல்பாடுகள் குறித்து, ஆழமாகச் சிந்தித்து, அவரின் கொடைக்கு நம் இதயங்களைத் திறந்து, இறையன்பிற்கு சான்று பகர்பவர்களாக வெளியில் செல்ல தூய ஆவியார் நமக்கு அழைப்புவிடுக்கிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில், மே 23, இஞ்ஞாயிறு நண்பகல், வானக அரசியே வாழ்த்தொலி உரைக்காக காத்திருந்த மக்களை நோக்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பாஸ்கா விழாவுக்கு 50 நாட்களுக்குப்பின் எருசலேமில் நடந்ததை விவரிக்கும் திருத்தூதர் பணிகள் நூல் பகுதி குறித்து எடுத்துரைத்தார். 

மேலறையில், அன்னை மரியாவுடன் தங்கியிருந்த சீடர்களுக்குத் தோன்றிய இயேசு, தூய ஆவியார் வரும்வரை அங்கேயே தங்கியிருக்குமாறு எடுத்துரைத்ததை நினைவூட்டினார்.

திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது, என தூய ஆவியாரின் வருகை குறித்து திருத்தூதர் பணிகள் நூல் விவரிப்பது, தூயஆவியார் ஆற்றலுடையவர், சுதந்திரமானவர் என்பதை மட்டுமல்ல, அவர் கட்டுப்படுத்த முடியாதவர், நிறுத்தப்பட முடியாதவர், அளவிடப்பட முடியாதவர், மற்றும் அவர் செல்லும் திசையை நாம் முதலிலேயே அறியமுடியாது, என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வாழ்வை வழங்கும் ஆண்டவர் என தூய ஆவியாரை விவரிக்கும் நம் விசுவாச அறிக்கையைப்பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைத்தந்தை, மற்றும் மகனிலிருந்து புறப்பட்டு வரும் தூய ஆவியார், நம் ஒவ்வொருவரின் மனம் மற்றும் இதயத்திற்கு வாழ்வை வழங்குகிறார் என்றார்.

பெந்தகோஸ்து நாளின்போதும், திகைத்துப்போய், என்ன செய்வது என அறியாமல் அச்சம் கொண்டிருந்த சீடர்களைப்போல், நாமும் பலவேளைகளில் நமக்கென பாதுகாப்புச் சுவர்களை உருவாக்கி அதற்குள் முடங்க நினைக்கும் வேளைகளில், இறைவன் நம் இதயக் கதவுகளைத் திறந்து, தூய ஆவியாரை அனுப்பி, நம்மை புதிய படைப்பாக்குகிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அனைத்து மக்களையும் ஒருவருக்கொருவர் உரையாட வைப்பதன் வழியாக தூய ஆவியார் திருஅவைக்குள் ஒன்றிப்பைக் கொணர்கிறார் என உரைத்த திருத்தந்தை, நாம் இவ்வுலகில், புளிக்காரமாகவும், உப்பாகவும் ஒளியாகவும் செயல்படுவதற்குரிய வரத்தை தூய ஆவியார் வழங்குகிறார் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2021, 12:36

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >