மேரி தெரேசா: வத்திக்கான்
அன்றாடம் ஓடிக்கொண்டிருந்த வண்டிச் சக்கரத்தைப் பார்த்து, “மண் முழுவதும் சுற்றி வருகிறாயே, நீ பெற்ற அனுபவம்தான் என்ன?” என்று தெரு கேட்டது. அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சிறிதுநேரம் அமைதி காத்தது சக்கரம். பின்னர் அது தெருவைப் பார்த்து, “நான் என்னையே பலமுறை சுற்றி அளந்து கொள்கிறேன். அதனால்தான் உலகத்தையே அளந்து வருகிறேன்” என்று சொன்னது. பின்னர் மீண்டும் தெருவைப் பார்த்து, புரிகிறதா? என்று கேட்டது சக்கரம். உடனே அது சொன்னது – தன்னை அளந்தவன், மண்ணை அளந்தவன் என்று. (காசி ஆனந்தன் கதைகள்)