தேடுதல்

திருத்தந்தையின் மூவேளை செப உரை 130621

திருத்தந்தையுடன் செபிக்க

Angelus

Angelus Dómini nuntiávit Mariæ.
Et concépit de Spíritu Sancto.
Ave Maria...

Ecce ancílla Dómini.
Fiat mihi secúndum verbum tuum.
Ave Maria...

Et Verbum caro factum est.
Et habitávit in nobis.
Ave Maria...

Ora pro nobis, sancta Dei génetrix.
Ut digni efficiámur promissiónibus Christi.

Orémus.
Grátiam tuam, quǽsumus, Dómine,
méntibus nostris infunde;
ut qui, Ángelo nuntiánte, Christi Fílii tui incarnatiónem cognóvimus, per passiónem eius et crucem, ad resurrectiónis glóriam perducámur. Per eúndem Christum Dóminum nostrum.

Amen.

Gloria Patri... (ter)
Requiem aeternam...

Benedictio Apostolica seu Papalis

Dominus vobiscum.Et cum spiritu tuo.
Sit nomen Benedicat vos omnipotens Deus,
Pa ter, et Fi lius, et Spiritus Sanctus.

Amen.

மூவேளை செபம்

ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்

அவர் தூய ஆவியினால் கருத்தரித்தார் - அருள் நிறை

இதோ ஆண்டவருடைய அடிமை 

உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறை 

வார்த்தை மனுவுருவானார் 

நம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை

கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக

- இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும். 

செபிப்போமாக 

இறைவா! வானதூதர் அறிவித்தபடியே உமது திருமகன் இயேசு கிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை நாங்கள் அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்

ஆமென்.

தந்தைக்கும், மகனுக்கும்….( மூன்று முறை )

என்றென்றும் … ஆமென்.

திருத்தூதர் அல்லது திருத்தந்தையின் ஆசிர்வாதம்

இயேசு உங்களுடேனே  இருக்கிறார். உங்கள் ஆன்மாவுடனும்  இருக்கிறார்.

இயேசுவின் பெயர் பேறுபெற்றது;

இப்பொழுதும் எப்பொழுதும்.

எங்கள் உதவி இயேசுவின் நாமத்தில் இருக்கிறது.

அவர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.

எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன் , தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஆமென்.

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அனைத்தையும் படிக்கவும் >

அண்மைக் கட்டுரைகள்