தேடுதல்

இடிபாடுகளிடையே நடந்து செல்லும் ஒரு சிறுவன் இடிபாடுகளிடையே நடந்து செல்லும் ஒரு சிறுவன்   (ANSA)

உக்ரைனில் நடந்த தாக்குதலில் 5 குழந்தைகள் காயம்!

தாக்குதலின்போது பொதுமக்களும் குழந்தைகளும் இலக்காகக் கொள்ளப்படக் கூடாது : உக்ரைன் நாட்டிற்கான யுனிசெப் நிறுவனம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனின் Karkiv மற்றும் Kherson பகுதியில் நடந்த தாக்குதலில் மொத்தம் 5 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக மே 8, இப்புதனன்று, தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது அந்நாட்டிற்கான  யுனிசெப் நிறுவனம்.

மே 5, இஞ்ஞாயிறன்று, உக்ரைனின் உயிர்ப்புப் பெருவிழா விடுமுறையின்போது (ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மே 5 சிறப்பித்தனர்) கார்கிவ் பகுதியில் உள்ள குடும்பங்கள் 4 குழந்தைகள் காயமடைந்ததற்கு காரணமான இந்தத் தாக்குதலால் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர் என்றும் அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கெர்சன் பகுதியில்  நடந்த மற்றொரு தாக்குதலில் 1 குழந்தை காயமடைந்ததாகவும், இரு பகுதிகளிலும் பள்ளி மற்றும் நலப் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் கூறும் அச்செய்தி, தாக்குதலின்போது பொதுமக்களும் குழந்தைகளும் இலக்காகக் கொள்ளப்படக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 May 2024, 15:27