தேடுதல்

இந்தியாவில் கோவிட் சோதனைக்காக காத்திருப்போரின் வரிசை இந்தியாவில் கோவிட் சோதனைக்காக காத்திருப்போரின் வரிசை 

இந்தியாவில் கொள்ளைநோயிலிருந்து குணமடைந்தோர் 50 இலட்சம்

உலகில், கொரோனா கொள்ளைநோயால் 3 கோடியே 33 இலட்சத்து 19 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சத்து 2 ஆயிரத்து 524 பேர் பலியாகி உள்ளனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கொரோனா கொள்ளைநோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 60 இலட்சத்து 74 ஆயிரத்து 700க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 50 இலட்சத்து 16 ஆயிரத்து 520 பேர் குணமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் 2 விழுக்காட்டினரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 7 கோடியே 19 இலட்சத்து 67 ஆயிரத்து 230 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

இத்திங்கள் இந்திய நேரம் நண்பகல் ஒருமணி வரையுள்ள நிலவரப்படி, உலகில் கொரோனா கொள்ளைநோயால் 3 கோடியே 33 இலட்சத்து 19 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 இலட்சத்து 2 ஆயிரத்து 524 பேர் பலியாகி உள்ளனர், 2 கோடியே 46 இலட்சத்து 42 ஆயிரத்து 17 பேர் இந்நோயிலிருந்து மீண்டுள்ளனர். (Dinamalar)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2020, 14:16