தேடுதல்

கர்தினால் Pedro Rubiano Sáenz அவர்கள் காலமானார் கர்தினால் Pedro Rubiano Sáenz அவர்கள் காலமானார் 

91 வயது கர்தினால் Sáenz அவர்கள் இறைபதம் சேர்ந்தார்

1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலம்பியாவில் பிறந்த கர்தினால் Sáenz, 2001ஆம் ஆண்டு பிப்ரவரியில் புனித திருத்தந்தை ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கொலம்பியா நாட்டின் Bogotá முன்னாள் பேராயர், கர்தினால் Pedro Rubiano Sáenz அவர்கள், தன் 91ஆம் வயதில் இறைபதம் சேர்ந்தார்.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி கொலம்பியாவின் Cartago என்னுமிடத்தில் பிறந்த கர்தினால் Sáenz, 1956ஆம் ஆண்டு அப்போதைய காலி மறைமாவட்டத்தின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

1971ஆம் ஆண்டு Cúcuta ஆயராக நியமிக்கப்பட்ட இவர், 1983ல் Cali உயர்மறைமாவட்ட வாரிசுரிமைப் பேராயராகவும், 1985ல் பேராயராகவும், 1994ல் Bogotá பேராயராகவும் நியமிக்கப்பட்டார்.

2001ஆம் ஆண்டு பிப்ரவரியில் இவர், புனித திருத்தந்தை ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2024, 15:58