தேடுதல்

ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வின்போது கர்தினால் பரோலின் ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வின்போது கர்தினால் பரோலின் 

கடவுள் என்றும் நம்மோடு, நம் அருகில் இருக்கின்றார்

“என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல் நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

எல்லாச் சூழல்களிலும், நிலைகளிலும், தனிமையிலும் நாம் தீமையைக் கண்டு அஞ்சாமல் வாழ வேண்டும் என்றும், ஒன்றிப்பின் கடவுள், பிரிவினைகள் மற்றும் பிளவுகளை வென்ற கடவுள், என்றும் நம்மோடு, நம் அருகில் இருக்கின்றார் என்றும் கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

மார்ச் 9 சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் நடைபெற்ற பேரருள்திரு வின்சென்ஷோ தூர்துரோ அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வின்போது இவ்வாறு கூறினார் திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

“நீர் என்னுடன் இருக்கின்றீர் உமது கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும் என்ற திருப்பாடல் வரிகளுக்கு ஏற்ப நல்ல ஆயன் இயேசு நமது பாதையில் நம்முடன் நடக்கின்றார் என்றும், தனது கோலால் ஆடுகளை வழிநடத்தியும், பாதுகாப்பு அளித்தும் உதவுகின்றார் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

ஆயர் பணி என்பது நல்லாயனாம் இயேசுவோடு அருகிருந்து அவரது மந்தைகளைக் கூட்டிச்சேர்ப்பது என்றும், அன்பின் எல்லைகளை விரிவுபடுத்தி, மேய்ப்புப்பணியில் ஏற்படும் சவால்களைத் துணிவுடன் சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கர்தினால் பரோலின்.

“என் அன்பில் நிலைத்திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவருடைய அன்பில் நிலைத்திருப்பது போல் நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால், என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். என்ற இறைவார்த்தைக்கு ஏற்றவாறு கடவுளோடு மிக நெருங்கிய உறவு கொண்டு வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2024, 13:25