திருத்தந்தைக்காக செபிக்க கர்தினால் Blase Cupich அழைப்பு!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நுரையீரல் நோய்த்தொற்றுக் காரணமாக, உரோமையுள்ள Gemelli மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அனைத்து மதத்தினரும் திருத்தந்தைக்காக இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் Chicago-வின் கர்தினால் Blase Cupich
இன்றிரவு நீங்கள் உறங்கச் செல்லும் போது, திருத்தந்தையை நினைவுகூர்ந்து செபம் ஒன்றைச் சொல்லுங்கள் என்றும், இது எல்லா மதத்தினருக்கமானது, ஏனென்றால் அவர் உலகம் முழுவதும் உள்ள பல மக்களால் மதிக்கப்படுகிறார், அன்புகூரப்படுகிறார் என்பதை நான் அறிவேன் என்றுக் கூறியுள்ளார் கர்தினால் Cupich.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நற்செயல்கள் புரிவதில் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர் என்றும், தன்னால் முடிந்த நற்செயல்கள் அனைத்தையும் செய்யும் செயல்திறன் மிக்கவர் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தையின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான கர்தினால் Cupich.
இதற்கிடையில், மார்ச் 30, இவ்வியாழன்று வெளியிட்ட தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பல செய்திகள் தனது இதயத்தைத் தொட்டதாகவும், தங்களின் நெருக்கத்தையும் செபங்களையும் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மார்ச் 29, இப்புதன் மாலை, முன்பு திட்டமிடப்பட்ட சில பரிசோதனைகளுக்காகவும், நுரையீரல் நோய்த்தொற்றை போக்கும் சிகிச்சைக்காகவும் உரோமையுள்ள Gemelli மருத்துவமனைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்