தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

நம்மை மீட்கும் இறைத்தந்தையின் அரவணைப்பு

ஏப்ரல் 25 வியாழன் நற்செய்தியாளரான தூய மாற்கு விழாவைத் திருஅவை சிறப்பிக்கும் வேளையில் இறைத்தந்தையின் அரவணைப்பு பற்றிய தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைத்தந்தையின் மீட்கும் அரவணைப்பை ஒரு போதும் நாம் இழந்துவிடக்கூடாது என்றும், அதுவே நமது வாழ்க்கைக்கான முன் உதாரணம், நற்செய்தியின் இதயம், வேரூன்றப்பட்ட அன்பின் அடையாளம் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 25 வியாழன் நற்செய்தியாளரான தூய மாற்கு விழாவைத் திருஅவை சிறப்பிக்கும் வேளையில் இறைத்தந்தையின் அரவணைப்பு பற்றிய தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறு குழந்தையைப் போல இறைவனை நோக்கிச் செல்ல நம்மை நாம் அனுமதிப்போம் என்றும், இதன் வழியாக நம் உடன்வாழும் சகோதர சகோதரிகளை இரக்கத்துடன் அரவணைத்து தொண்டுப்பணிகள் ஆற்ற முடியும் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 April 2024, 14:12