தேடுதல்

செபிக்கும் கரங்கள் செபிக்கும் கரங்கள் 

நம்மை நன்கு அறிந்து அன்பு செய்யும் இயேசு

நமது சிலுவைகள், உயிர்ப்பில் உருமாறும். ஒவ்வொரு துன்பமும் நம்பிக்கையாகவும், ஒவ்வொரு புலம்பல்களும் நடனமாகவும் மாறும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

இயேசு நம்மை நன்கு அறிந்திருக்கின்றார். நம்மை அன்பு செய்கின்றார் என்றும், நாம் ஒருபோதும் பயம்கொள்ளத் தேவையில்லை என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல்13 சனிக்கிழமை ஹேஸ்டாக் உயிர்ப்பின் காலம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது ஒவ்வொரு சிலுவையும் உயிர்ப்பில் உருமாறும் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு நம்மை நன்கு அறிந்துள்ளார், அவர் நம்மை அன்பு செய்கின்றார், நாம் பயம் கொள்ளத்தேவையில்லை, ஏனெனில், நமது சிலுவைகள், உயிர்ப்பில் உருமாறும். ஒவ்வொரு துன்பமும் நம்பிக்கையாகவும், ஒவ்வொரு புலம்பல்களும் நடனமாகவும் மாறும் என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 April 2024, 13:30