தேடுதல்

இறைஇரக்க ஆண்டவர் இயேசு இறைஇரக்க ஆண்டவர் இயேசு  (ANSA)

கடவுள் அன்பின் மீது நம்பிக்கை கொள்வோம் – திருத்தந்தை

போரினால் துன்புறும் நாடுகளின் மக்கள் அனைவருக்கும் நிலையான ஓர் அமைதி கிடைக்கப்பெற இறைவனிடம் கேட்போம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பின் மீது ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்றும், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் நமது வாழ்க்கையையும் நாம் வாழ்கின்ற உலகையும் அவரிடம் கையளிப்போம் என்றும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 6 சனிக்கிழமை இறைஇரக்க ஞாயிறு என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக அமைதிக்காக செபிக்கவும் அச்செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 7 ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட இருக்கும் இறைஇரக்க ஞாயிறு பற்றி அச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், போரினால் துன்புறும் நாடுகளின் மக்கள் அனைவருக்கும் நிலையான ஓர் அமைதி கிடைக்கப்பெற இறைவனிடம் கேட்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

“நாளை நாம் இறைஇரக்க ஞாயிறினை சிறப்பிக்க இருக்கின்றோம். கடவுள் நம்மீது கொண்ட அன்பில் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்ளவேண்டாம். மாறாக, நம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு நமது வாழ்க்கையையும் நாம் வாழ்கின்ற உலகையும் அவரது கரங்களில் ஒப்படைப்போம். அமைதியிழந்து போரினால் துன்புறும் மக்களுக்கு அமைதியினை இறைவனிடம் கேட்போம்” என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 April 2024, 14:46