தேடுதல்

திருச்சிலுவை திருச்சிலுவை 

சிலுவைகள் விண்ணக மகிமையின் கதவுகள் - திருத்தந்தை

இயேசுவோடு நமது ஒவ்வொரு சிலுவையும் உயிர்ப்பில் முடிவடைகின்றது. இருள் ஒளியிலும், கைவிடப்படுதல் ஒன்றிப்பிலும் முடிவடைகின்றது

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளுடன் இருக்கையில் நமது துயரமான சிலுவைகள் அனைத்தும் வாழ்க்கையின் முடிவுகள் அல்ல, மாறாக அவை அனைத்தும் விண்ணக மகிமையை நோக்கிச் செல்லும் கதவுகள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 23 சனிக்கிழமை புனித வாரத்துக்கு முந்தைய நாளான இன்று சிலுவையின் மகிமை  குறித்த தனதுக் கருத்துக்களை இவ்வாறு பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவோடு நமது சிலுவை உயிர்ப்பில் முடிவடைகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

நமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிலுவைகள் அனைத்தும் முடிவுகள் அல்ல மாறாக கடவுளுடன் இருக்கையில் அவை அனைத்தும் விண்ணக மகிமையை நோக்கிச்செல்லும் கதவுகள். ஏனெனில், இயேசுவோடு நமது ஒவ்வொரு சிலுவையும் உயிர்ப்பில் முடிவடைகின்றது. இருள் ஒளியிலும், கைவிடப்படுதல் ஒன்றிப்பிலும் முடிவடைகின்றது என்பதே திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 March 2024, 14:36