தேடுதல்

Pope Francis holds weekly general audience at the Vatican Pope Francis holds weekly general audience at the Vatican 

துன்ப துயர வேளைகளில் கிறிஸ்துவில் வேரூன்றுவோம்!

துன்ப துரங்கள் நமது வாழ்வைத் தாக்கும் வேளை, நாம் விவேகத்தின் நற்பண்பில் வளர உதவும்படி இறைவனிடம் வேண்டுவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நமது வாழ்வைத் துன்ப துயர புயல்கள் மற்றும் காற்றுகள் தாக்கும் வேளையில், மூலக்கல்லாகிய கிறிஸ்துவில் நாம் நங்கூரமிடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 20, இப்புதனன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு அறிவுறுத்தியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தகைய வேளைகளில், நாம் விவேகத்தின் நற்பண்பில் வளர உதவும்படி இறைவனிடம் வேண்டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தைக்கு வெவ்வேறு மொழிகளில் மொத்தம் ஒன்பது டுவிட்டர் கணக்குகள் உள்ளன. ஸ்பானிஷ் மொழியில் மட்டும் 98 இலட்சம் மக்களும், உலகளவில் 2 கோடியே 34 இலட்சத்திற்கும் அதிகமான மக்களும் அவரது குறுஞ்செய்திகளைப் பின்தொடர்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2024, 15:02