தேடுதல்

2024.03.15 card. Paul Josef Cordes 2024.03.15 card. Paul Josef Cordes 

கர்தினால் PAUL JOSEF கிறிஸ்துவின் அன்பு,மென்மையை வெளிப்படுத்தியவர்

இளைஞர்கள், தேவையில் இருப்பவர்கள், போன்றோருக்கு ஆற்றிய பணியின் வழியாகக் கிறிஸ்துவின் அன்பையும் மென்மையையும் வெளிப்படுத்தியவர் கர்தினால் PAUL JOSEF

மெரினா ராஜ் – வத்திக்கான்

கர்தினால் PAUL JOSEF CORDES கடவுள் மற்றும் திருஅவை  பணிக்காக நம்பிக்கை மற்றும் தாராளமனத்துடன் பணியாற்றியவர் என்றும், இளைஞர்கள், தேவையில் இருப்பவர்கள், போன்றோருக்கு ஆற்றிய பணியின் வழியாகக் கிறிஸ்துவின் அன்பையும் மென்மையையும் வெளிப்படுத்தியவர் என்றும் இரங்கல் தந்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மார்ச் 16 வெள்ளிக்கிழமை இறைபதம் சேர்ந்த  மறைந்த கர்தினால் PAUL JOSEF CORDES அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அனுப்பியுள்ள தந்திச்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் அவர்களின் மறைவினால் வருந்தும் குடும்பத்தார் மற்றும் PADERBORN உயர்மறைமாவட்ட ஆயர்கள் மற்றும் மக்களுக்குத் தன் ஆறுதலையும் உடனிருப்பையும் தெரிவித்துள்ளார். 

திருத்தந்தையின் இரங்கல் தந்திச் செய்தியானது கர்தினால் PAUL JOSEF CORDES அவர்களின் உறவினர்  KLAUS E RAINER BAUMGARDT அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பொதுநிலையினருக்கானத் திருப்பீடத்துறை ஆலோசகர், ஏழை எளிய மக்களுக்கான திருத்தந்தையின் உதவி அமைப்பு, போன்ற திருப்பீட துறைகளில் பணியாற்றி தனது ஆற்றலையும் சாட்சியமுள்ள வாழ்வையும் அர்ப்பணித்து சிறப்புடன் பணியாற்றிய கர்தினால்  PAUL JOSEF CORDES அவர்களுக்கு  இறைவன் நிறை அமைதியைக் கொடுக்க செபிப்பதாகவும், அன்னை மரியின் பரிந்துரையை நாடுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2024, 15:38