தேடுதல்

2023ஆம் ஆண்டு பாஸ்கா கொண்டாட்ட அலங்காரங்கள் 2023ஆம் ஆண்டு பாஸ்கா கொண்டாட்ட அலங்காரங்கள்  (ANSA)

திருத்தந்தையின் புனித வார கொண்டாட்ட விவரங்கள்

உயிர்ப்பு ஞாயிறு நண்பகலில் புனித பேதுரு பேராலய மேல்தளத்திலிருந்து ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தியையும் ஆசீரையும் உலகின் அனைத்து மக்களுக்கும் வழங்குவார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

மார்ச் மாதத்தின், குறிப்பாக திருத்தந்தையின் புனித வாரம் மற்றும் உயிர்ப்பு ஞாயிறு கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது, திருப்பீட தகவல் தொடர்பு செயலகம்.

மார்ச் மாதம் 24ஆம் தேதி, குருத்து ஞாயிறன்று, அதாவது இயேசு எருசலேமுக்குள் நுழைந்ததை சிறப்பிக்கும் விதமாக,  வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, அதே வாரம் பெரிய வியாழனன்று காலை, திருஎண்ணெய் புனிதப்படுத்தும் திருப்பலியை நிறைவேற்றுவார்.

அதற்கு அடுத்த நாளாகிய புனித வெள்ளியன்று மாலை வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் இயேசுவின் பாடுகள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை தலைமையேற்று நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் பின் உரோம் நகரின் கொலோசியம் அரங்கில் சிலுவைப்பாதை நிகழ்வை வழி நடத்திச் செல்வார்.

வழக்கம்போல் புனித சனியன்று மாலை பாஸ்கா திருவிழிப்புத் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நிகழ்த்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஞாயிறன்று கிறிஸ்து உயிர்ப்பு திருவிழா திருப்பலியை புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நிறைவேற்றுவார்.

உயிர்ப்பு ஞாயிறு நண்பகலில் புனித பேதுரு பேராலய மேல்தளத்திலிருந்து ‘நகருக்கும் உலகுக்கும்’ என பொருள்படும் ‘ஊர்பி எத் ஓர்பி’ சிறப்புச் செய்தியையும் ஆசீரையும் உலகின் அனைத்து மக்களுக்கும் வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2024, 15:38