தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

தவக்கால தியானத்தைத் தொடங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை மதியம் வரை தவக்காலத்தை முன்னிட்டு தியானத்தை உரோமில் செய்யத் தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உரோமில் வசிக்கும் கர்தினால்கள், திருப்பீடத்துறையின் தலைவர்கள் மற்றும் உரோமன் கூரியாவின் மேலதிகாரிகள் என அனைவரோடும் இணைந்து தவக்கால தியானத்தினைத் துவங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 18 ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை மதியம் வரை தவக்காலத்தை முன்னிட்டு தியானத்தை உரோமில் செய்யத் தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதனால் இவ்வாரத்திற்கான திருத்தந்தையின் சந்திப்புக்கள் மற்றும் புதன்பொது மறைக்கல்வி உரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 February 2024, 13:21