தேடுதல்

மூன்று அரசர்கள் வேடமிட்டுவரும் ஜெர்மன் குழந்தைகள் மூன்று அரசர்கள் வேடமிட்டுவரும் ஜெர்மன் குழந்தைகள் 

கிறிஸ்தவ விசுவாசிகள் குறித்த உலகின் எதிர்பார்ப்பு

இயேசுவைக் காண வந்த ஞானிகளைப் போல் நாமும் நம் பார்வையை உயர்த்தி, நம் இதயங்களின் பேரார்வத்திற்கு செவிமடுத்து, நமக்கு மேல் ஒளிர்விட இறைவன் வழங்கியிருக்கும் விண்மீனைப் பின்தொடர்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வானுலகு தொடர்புடையவைகளில் புதிய ஆர்வத்தை வழங்கவேண்டும் என விசுவாசிகளிடம் இருந்து இவ்வுலகம் எதிர்பார்ப்பதாக தன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 6ஆம் தேதி சிறப்பிக்கப்படும் திருக்காட்சி திருவிழாவையொட்டி ஜனவரி 5ஆம் தேதி இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, வானுலகம் தொடர்புடையவைகள் குறித்த புதிய ஆர்வத்தை விசுவாசிகள் வெளிப்படுத்த வேண்டும் என உலகம் எதிர்பார்ப்பதாகவும், இயேசுவைக் காண வந்த ஞானிகளைப் போல் நாமும் நம் பார்வையை உயர்த்தி, நம் இதயங்களின் பேரார்வத்திற்கு செவிமடுத்து, நமக்கு மேல் ஒளிர்விட இறைவன் வழங்கியிருக்கும் விண்மீனைப் பின்தொடர்வோம் எனவும் அதில் எழுதியுள்ளார்.

மேலும், அமைதியற்றவர்களாக தேடிக்கொண்டிருக்கும் நாம், கடவுளின் வியத்தகுச் செயல்களுக்கு நம்மைத் திறந்தவர்களாகச் செயல்படுவோம் எனவும் அந்த டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 6ஆம் தேதியே மூன்று அரசர்கள் விழா, அதாவது, திருக்காட்சித் திருவிழா வருகின்றபோதிலும் பல தலத்திருஅவைகளில், இவ்விழா ஞாயிறு திருவழிபாட்டுக் கொண்டாட்டத்துடன் சிறப்பிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2024, 14:55