தேடுதல்

16 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளம் வழங்கிய திருத்தந்தை

திருமுழுக்கு அருளடையாளச் சடங்கினை திருத்தந்தையுடன் இணைந்து திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski மற்றும் வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவர், கர்தினால் Fernando Vérgez Alzaga சிறப்பித்தனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வத்திக்கான் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 16 குழந்தைகளுக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சனவரி 7 ஞாயிற்றுக்கிழமை இயேசுவின் திருமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு இரட்டை குழந்தைகள் உட்பட 16 பேருக்கு திருமுழுக்கு அருளடையாளத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியான இந்நேரத்தில் குழந்தைகளின் சத்தமும் அழுகையும் இவ்விழாவிற்கு இன்னிசை கச்சேரி போன்று அமைந்துள்ளது என்றும் கூறினார்.

திருமுழுக்கு அருளடையாளச் சடங்கினை திருத்தந்தையுடன் இணைந்து திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski மற்றும் வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவர், கர்தினால் Fernando Vérgez Alzaga சிறப்பித்தனர்.

குழந்தைகளின் அழுகுரலும் சத்தமும் நிறைந்திருந்த சிஸ்டைன் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள் ஏனெனில் இன்றைய திருவிழா அவர்களுக்கானது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 January 2024, 13:23