தேடுதல்

கர்தினால் செர்ஜியோ செபஸ்தியானி கர்தினால் செர்ஜியோ செபஸ்தியானி 

92 வயது இத்தாலிய கர்தினால் செர்ஜியோ செபஸ்தியானி மறைவு

கர்தினால் செபஸ்தியானி அவர்கள், திருப்பீடத் தூதுவராகவும், திருப்பீடப் பொருளாதார அவையின் தலைவராகவும், இரண்டாயிராமாம் ஜூபிலி ஆண்டிற்கான மைய அவையின் பொதுச்செயலராகவும் பணியாற்றியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலிய கர்தினால் செர்ஜியோ செபஸ்தியானி அவர்கள் ஜனவரி 16, செவ்வாய்க்கிழமையன்று இறைபதம் சேர்ந்ததையொட்டி, அவரின் உறவினர்களுக்கு இரங்கல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பல காலமாக உடல்நலமின்றி இருந்த கர்தினால் செபஸ்தியானி அவர்களின் மரணச் செய்தி கேட்டு தன் ஆழந்த அனுதாபங்களை அவரின் உறவினர்களுக்கு அனுப்புவதாகக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையர்களின் கீழ் திருப்பீடத் தூதுவராகவும், திருப்பீடப் பொருளாதார அவையின் தலைவராகவும், இரண்டாயிராமாம் ஜூபிலி ஆண்டிற்கான மைய அவையின் முதல் பொதுச்செயலராகவும் அவர் ஆற்றியுள்ள பணிகளுக்கு இறைவனுக்கு நன்றிகூறுவதாகவும் தன் இரங்கல் தந்தியில் தெரிவித்துள்ளார்.

கர்தினால் செபஸ்தியானி அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான செபத்திற்கும் உறுதி கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1931ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி இத்தாலியில் பிறந்த கர்தினால் செபஸ்தியானி அவர்கள், மடகாஸ்கர், மௌரிசியஸ், துருக்கி ஆகிய இடங்களில் திருப்பீடத்தூதராகப் பணியாற்றியுள்ளார். இவர் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரால் 2001ஆம் ஆண்டு கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 January 2024, 15:10