தேடுதல்

கர்தினால் பரோலினுடன் திருத்தந்தை கர்தினால் பரோலினுடன் திருத்தந்தை  (AFP or licensors)

திருத்தந்தையின் பங்கேற்புடன் C9 கர்தினால்கள் ஆலோசனை அவை கூட்டம்

அகில உலக திருஅவையின் நிர்வாகத்தில் உதவ, 2013ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்டது C9 என்ற கர்தினால்கள் ஆலோசனை அவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அகில உலக திருஅவையின் நிர்வாகத்தில் உதவுவதற்கென 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட  C9 என்ற உயர்மட்ட கர்தினால்கள் ஆலோசனை அவை கூட்டம் தற்போது திருத்தந்தையின் பங்கேற்புடன் வத்திக்கானில் இடம்பெற்றுவருகிறது.

தற்போது கர்தினால்கள் உயர்மட்ட ஆலோசனை அவைக் கூட்டத்தில் சில அங்கத்தினரகள் ஓய்வு பெற்றும் புதிய அங்கத்தினர்கள் இணைக்கப்பட்டும் உள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட இந்த அவை அக்டோபர் 4ஆம் தேதி வத்திக்கானில் துவங்கி இடம்பெற்றுவருகிறது.

புதிய C9 அவையின் அங்கத்தினர்களாக திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்; மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ்; வத்திக்கான் நகர நிர்வாகத் தலைவர், கர்தினால் Fernando Vérgez Alzaga; காங்கோ குடியரசின் Kinshasa பேராயர், கர்தினால் Fridolin Ambongo Besungu; அமெரிக்க ஐக்கிய நாட்டின் பாஸ்டன் பேராயர், கர்தினால்  Seán Patrick O'Malley; இஸ்பெயினின் பர்ச்சலோனா பேராயர், கர்தினால்  Juan José Omella Omella; கானடாவின் கியூபெக் பேராயர், கர்தினால் Gérald Lacroix; லக்ஸம்பர்க் பேராயர், கர்தினால்  Jean-Claude Hollerich; பிரேசில் நாட்டின்  சான் சல்வதோர் தெ பாஹியாவின் பேராயர், கர்தினால் Sérgio da Rocha ஆகியோர் உள்ளனர். இந்த கர்தினால்கள் உயர்மட்ட அவையின் செயலராக பேராயர் Marco Mellino அவர்கள் செயல்பட்டு வருகிறார்.

அகில உலக கத்தோலிக்க திருஅவையின் நிர்வாகத்தில் உலகின் பல்வேறு பகுதிகளைக் கொண்ட கர்தினால்களைக் கொண்டு C9 உயர்மட்ட கர்ர்தினால்கள் அவையை 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி உருவாக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். இதன் முதல் கூட்டம் அதே ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி இடம்பெற்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 December 2023, 15:02