தேடுதல்

அமைதியின் சின்னம் புறா அமைதியின் சின்னம் புறா  (©Aditya - stock.adobe.com)

நீதியும் அமைதியும் பாயும் கடவுளின் அரசு

மனிதகுலத்தையும் அனைத்து உயிரினங்களையும் வளர்க்கும் தூய்மையான நீரின் நீரோட்டத்தைப் போல நீதியும் அமைதியும் நம் இதயத்தில் பாயும்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுளின் அரசை முதன்மையாகத் தேடும் நாம், இறைவனோடும் உடன் வாழும் சகோதர சகோதரிகளோடும் நாம் வாழுகின்ற இந்த படைப்போடும்  நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 7 வியாழன் அன்று ஹாஸ்டாக் படைப்பின் காலம் என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  கடவுளின் அரசை நாடும் நம் இதயத்தில் நீதியும் அமைதியும் பாயும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனோடும்,  நம்மோடு வாழ்கின்ற சகோதர சகோதரிகளோடும், நாம் வாழ்கின்ற இந்தப் படைப்போடும் உறவை வளர்த்துக்கொண்டு, கடவுளின் அரசை முதன்மையாகத் தேடவேண்டும் என்றும், அவ்வாறு தேடும்போது, ​​மனிதகுலத்தையும் அனைத்து உயிரினங்களையும் வளர்க்கும் தூய்மையான நீரின் நீரோட்டத்தைப் போல நீதியும் அமைதியும் நம் இதயத்தில் பாயும் என்றும் அக்குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2023, 11:58