தேடுதல்

Amazon காடுகள் Amazon காடுகள்  (ANSA)

காலநிலை அநீதியால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்போம் :திருத்தந்தை

படைப்பாற்றலுக்கு எதிரான அர்த்தமற்ற போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அழைப்புக்கு செவிசாய்ப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அநீதியால் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கவும், படைப்பாற்றலுக்கு எதிரான அர்த்தமற்ற போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அழைப்புக்குச் செவிசாய்க்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 25, இவ்வியாழனன்று, தான் வெளியிட்ட குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அநீதிகளுக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரும் செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று சிறப்பிக்கப்படவிருக்கும்  படைப்பின் பராமரிப்புக்கான உலக இறைவேண்டல் தினச் செய்தியை மே 25, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள வேளை, மனிதநேயம் மற்றும் இயற்கையுடன் சரியான உறவைப் பேணிக்காத்து, நாம் கடவுளுக்கு  ஏற்புடையவற்றைத் தேடும்போது (மத் 6:33), நீதியும் அமைதியும் ஒருபோதும் தோல்வியடையாத தூய நீரின் ஓட்டத்தைப் போல பாய்ந்து, மனிதகுலத்தையும் அனைத்து உயிரினங்களையும் வளர்க்கும் என்றும் அச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 May 2023, 14:59