தேடுதல்

ஹங்கேரியில் திருத்தந்தை பிரான்சிஸ் ( கோப்புப்படம் 2021 செப். 12) ஹங்கேரியில் திருத்தந்தை பிரான்சிஸ் ( கோப்புப்படம் 2021 செப். 12)  (AFP or licensors)

ஹங்கேரி திருத்தூதுப்பயண விவரங்கள் வெளியீடு

குழந்தைகளைப் பார்வையிடல், ஏழைகளை, குடிபெயர்ந்தோரைச் சந்தித்தல், இளையோருடன் உரையாடல் - ஹங்கேரி திருப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஹங்கேரி நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும் தலத்திருஅவை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வரும் வாரம் ஏப்ரல் 28 முதல் 30 வரை அந்நாட்டில் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வதை மீண்டும் எடுத்துரைத்து அவரின் பயண விவரங்களை வெள்ளியன்று வெளியிட்டுள்ளது திருப்பீட  செய்தித் தொடர்பு அலுவலகம்.

தலைநகர் புதாபெஸ்ட் நகரில் மட்டுமே திருத்தூதுப்பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை உள்ளூர் நேரம் எட்டு மணியளவில் உரோம் Fiumicino விமானதளத்திலிருந்து புறப்பட்டு ஏறக்குறைய 1மணி 50 நிமிடங்களில் தலைநகரை வந்தடைந்து அதேநாளில் அரசுத்தலைவர், பிரதமர், அரசு அதிகாரிகள் ஆகியோரை தனித்தனிக் குழுக்களாக சந்தித்தபின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமடமாணவர்கள், மேய்ப்புப் பணியாளர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடுவார்.

ஏப்ரல் 29 சனிக்கிழமையன்று, புதாபெஸ்தின் பெத்தானி இல்லம் சென்று குழந்தைகளைப் பார்வையிடல், புனித எலிசபெத் கோவிலில் ஏழைகள் மற்றும் குடிபெயர்ந்தோரைச் சந்தித்தல், கிரேக்க கத்தோலிக்க சமூகத்தைச் சந்தித்தல், இளையோரைச் சந்தித்தல், அங்குள்ள இயேசுசபையினரைச் சந்தித்தல் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஹங்கேரி நாட்டிற்கான திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாளான ஏப்ரல் 30 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9 மணிக்கு பொதுமக்களுடன் திருப்பலி, மாலையில் கல்வி மற்றும் கலாச்சார கழகத்தின் அங்கத்தினர்களைச் சந்தித்து உரையாடுதல் போன்றவைகளை நிறைவேற்றியபின் அன்று மாலை 8 மணியாளவில் உரோம் நகர் வந்தடைவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 April 2023, 14:31