ஐக்கிய அரபு அமீரக அதிபரின் மறைவுக்கு திருத்தந்தை இரங்கல்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரான Sheikh Khalifa bin Zayed Al Nahyan மறைவுக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அவர் அர்ப்பண மனம் கொண்ட சிறந்ததொரு தலைவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அரசுத்தலைவர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த இரங்கல் செய்தியில், ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மரணம் அறிந்து தான் மிகவும் துயரமடைந்ததாகவும், தனது இதயப்பூர்வமான அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.
திருஅவைக்கும், ஐக்கிய அரபு அமீரக கத்தோலிக்க சமூகங்களுக்கும் அவர் காட்டிய உயர்வான பணிவிற்காகவும், மக்கள் மற்றும் மத மரபுகளுக்கு இடையேயான உரையாடல், புரிதல் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மதிப்பீடுகளுக்கான அவரது அர்ப்பணிப்புக்காகவும் நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
அவரது ஆன்மா பேரின்ப வீட்டில் இறைவனோடு இளைப்பாறவும், அவரது கொள்கைகளும், மதிப்பீடுகளும் நல்லெண்ணம் கொண்ட அனைவருக்கும் ஊக்கம் அளிக்கவும் தான் தொடர்ந்து இறைவேண்டல் செய்வதாகவும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்