தேடுதல்

தூய ஆவியாரின் வருகை தூய ஆவியாரின் வருகை 

அச்சத்தை மாற்றி நம்பிக்கையை வழங்கும் தூய ஆவியார்

நம்மைவிட்டு தூரமாக விலகி, தனிமையில் வாழும் ஒரு கடவுளை நாம் கொண்டிருக்கவில்லை என்பதை மூவொரு கடவுள் குறித்த மறையுண்மை நமக்குச் சொல்லித் தருகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :  வத்திக்கான் செய்திகள்

தூய ஆவியாரிடம் எழுப்பப்பட்டுள்ள ஒரு விண்ணப்பமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியை, இத்திங்களன்று வெளியிட்டார்.

'அச்சத்தை மாற்றி அதில் நம்பிக்கையையும், கடின இதயத்தை மாற்றி அதில் நற்கொடையையும் வழங்கும், இறைவனின் நல்லிணக்கமாகிய தூய ஆவியாரே, எமக்குள் வந்தருளும்' என்ற விண்ணப்பத்தை, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியாக பதிவு செய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஞ்ஞாயிறன்று இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் முதல் டுவிட்டரில், 'நம்மைவிட்டு தூரமாக விலகி, தனிமையில் வாழும் ஒரு கடவுளை நாம் கொண்டிருக்கவில்லை என்பதை மூவொரு கடவுள் குறித்த மறையுண்மை நமக்குச் சொல்லித் தருகிறது. தன் மகனை நம்மிடையே  நம்மைப்போல் மனிதனாகப் பிறக்கவைத்த தந்தையாம் கடவுள், நம்முடன் மேலும் நெருக்கமாக இருக்கும்படி, தன் சொந்த ஆவியாரை அனுப்பியுள்ளார்' என எழுதியுள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காமெரீனோ மக்களை மனதில் கொண்டு, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

தன் இரண்டாவது டுவிட்டரில், 'இறைவனைப் பொருத்தவரையில், நாம் ஒவ்வொருவரும், வரம்பற்ற மதிப்புடையவர்களாக உள்ளோம். வானத்தின் கீழ் நாம் மிகச் சிறியவர்களாக இருக்கலாம், பூமி குலுங்கும்போது, நாம் சக்தியற்றவர்களாக உணரலாம், ஆனால், கடவுளுக்கு நாம், அனைத்தையும் விட விலைமதிப்பற்றவர்கள்' என எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 June 2019, 16:50