தேடுதல்

திருத்தந்தை ரொமேனியாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் இலச்சனை திருத்தந்தை ரொமேனியாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் இலச்சனை 

ரொமேனியா நாட்டு திருத்தலத்தில் திருத்தந்தையோடு இணைய...

கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், நல்மனம் கொண்ட அனைவரும் Csíksomlyó திருத்தலத்திற்கு சென்று, திருத்தந்தையுடன் இந்நிகழ்வில் பங்கேற்க, ஹங்கேரி ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ரொமேனியா நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் வேளையில், அந்நிகழ்வில் பங்கேற்க, டிரான்சில்வேனிய ஆயர்கள், ஹங்கேரி நாட்டு ஆயர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதை, தாங்கள் மனமுவந்து ஏற்றுக்கொள்வதாக, ஹங்கேரி நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

Csíksomlyó என்ற இடத்தில் அமைத்துள்ள அன்னை மரியா திருத்தலத்திற்கு திருத்தந்தை வருகை தரும் வேளையில், அந்தப் புனித நிகழ்வில் பங்கேற்க, ஹங்கேரி மக்கள் அனைவருக்கும் அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

புனித பேதுருவின் வழித்தோன்றல்களில் ஒருவர் முதல் முறையாக Csíksomlyó  திருத்தலத்திற்கு, வருகை தருவது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்றும், இத்திருத்தலம் ஹங்கேரி நாட்டு மக்களுக்கு மிக நெருக்கமான திருத்தலம் என்றும் ஹங்கேரி நாட்டு ஆயர் பேரவையின் மடல் கூறியுள்ளது.

கத்தோலிக்கர் மட்டுமல்லாமல், நல்மனம் கொண்ட அனைவரும் Csíksomlyó திருத்தலத்திற்கு சென்று, திருத்தந்தையுடன் இந்நிகழ்வில் பங்கேற்க, ஹங்கேரி ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 January 2019, 16:10