தேடுதல்

Cookie Policy
The portal Vatican News uses technical or similar cookies to make navigation easier and guarantee the use of the services. Furthermore, technical and analysis cookies from third parties may be used. If you want to know more click here. By closing this banner you consent to the use of cookies.
I AGREE
நம்வாழ்வு இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் நம்வாழ்வு இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் இராஜசேகரன் 

நேர்காணல் – நம்வாழ்வு இதழின் எதிர்நோக்கின் திருப்பயணம் - பகுதி 1

தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியின் இயக்குநராகவும், தமிழ்நாடு திருஅவையின் தனிப்பெரும் வார இதழான ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியராகவும், மற்றும் வெளியீட்டாளராகவும் பணியாற்றுகிறார் அருள்முனைவர். செ. இராஜசேகரன்.
நேர்காணல் - அருள்முனைவர் இராஜசேகரன் சிவகங்கை மறைமாவட்டம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

2025ஆம் ஆண்டு ஜனவரி 24 முதல் 26 வரை உலக சமூக தொடர்புகளுக்கான யூபிலியாக வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் சிறப்பிக்கப்பட இருக்கின்ற நிலையில் நமது நேர்காணலில் இதழியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கருத்துக்கள் மற்றும் சிந்தனைகள் பற்றியும் கடந்த வாரங்களில் அறிந்துகொண்டோம். அவ்வகையில் இன்றைய நம் நிகழ்வில் தமிழகத்தின் மிகச்சிறப்பான கத்தோலிக்க வார இதழான நம்வாழ்வு இதழின் ஆசிரியர் அருள்முனைவர் இராஜ சேகரன் அவர்கள் எதிர்நோக்கின் திருப்பயணிகள் என்ற இந்த யூபிலி ஆண்டு பற்றிக் கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றார்.

அருள்முனைவர்.செ. இராஜசேகரன் (ராஜா) சிவகங்கை மறைமாவட்ட அருள்பணியாளராக 2007 ஆம் ஆண்டு அருள்பொழிவு செய்யப்பட்டவர். எழுத்துத் துறையிலும், இசைத் துறையிலும் ஆர்வம் மிக்க இவர், இருநூற்றுக்கும் மேலான கிறிஸ்தவ வழிபாட்டுப் பாடல்களையும், சில சமூக விழிப்புணர்வு பாடல்களையும், மற்றும் தமிழ் செம்மொழி வாழ்த்துப் பாடல்களையும் எழுதி இசை அமைத்திருப்பவர். தமிழில் பதினொன்று நூல்களும், ஆங்கிலத்தில் ஏழு நூல்களும் படைத்ததுடன், இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களையும், தொகுப்பாசிரியராக ஐந்து நூல்களையும் படைத்திருப்பவர். இசைக்கலைஞராக, கவிஞராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக மற்றும் பத்திரிக்கை ஆசிரியராக தமிழ்நாடு திருஅவையில் நன்கு அறியப்பட்டவர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லொயோலா மேரி மவுண்ட் பல்கலைக் கழகத்தில் தொகுப்பு இறையியலில் (Systematic Theology) முதுகலைப் பட்டமும் UCLA – University of California Los Angeles – இல் இதழியலில் (Proficiency in Journalism) தனிப்புலமைக்கான இணை முதுகலைப் பட்டமும், மற்றும் சிகாகோ கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தில் ஊடக நற்செய்தி அறிவிப்புப் பணியில் முனைவர் பட்டமும் பெற்றவர். டிஜிட்டல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக, இன்றைய ஊடகத் தலைமுறையினரான இளையோருக்கு நற்செய்தி அறிவிப்பது பற்றிய, தமிழ் நாடு திரு அவையில் களஆய்வும், நேர்த்தியான முன்னெடுப்புகளுக்கான பரிந்துரைகளும் கொண்டதாக இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அமைந்திருந்தது. தமிழர் வாழ்வியல் பெருமைகள், நற்செய்தி தரும் தேடல்கள், உலகை ஆளும் ஊடகம், Transfiguring Love, The Journey of True Love, Praying with Saints, and Seeds of the Sower போன்ற நூல்கள் இவருடைய குறிப்பிடத்தக்கப் படைப்புகள். இவரின் முந்தைய படைப்பான ‘திருக்குடும்பத் திருக்காவியம்’ என்னும் திருக்குடும்பம் பற்றிய புதுக்கவிதை நூல் திரு அவையின் மரபை ஒட்டி, இலக்கிய உலகில் காவிய வரிசையில் இடம் பெற்றது தனிச்சிறப்பு. தற்போது இவர், தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியின் இயக்குநராகவும், தமிழ்நாடு திருஅவையின் தனிப்பெரும் வார இதழான ‘நம் வாழ்வு’ இதழின் முதன்மை ஆசிரியராகவும், மற்றும் வெளியீட்டாளராகவும் பணியாற்றுகிறார்.

தந்தை அவர்களை நம்வாழ்வு இதழின் எதிர்நோக்கின் திருப்பயணம் என்ற தலைப்பில் தனது கருத்துக்களை எடுத்துரைக்க எம் வத்திக்கான் வானொலி நேயர்கள் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 ஜனவரி 2025, 13:39
Prev
April 2025
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Next
May 2025
SuMoTuWeThFrSa
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031