தேடுதல்

இயேசுவும் நிக்கதேமுவும் இயேசுவும் நிக்கதேமுவும் 

தடம் தந்த தகைமை : தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறத்தல்

இயேசுவின் “மறுபிறப்பு” பற்றிய பார்வையை நிக்கதேம் வெறும் வார்த்தைப் பொருளாகப் பார்த்தார். அது வாழ்க்கைப் பொருளாகப் பார்க்கப்பட வேண்டியது.

அருள்பணி பெனடிக்ட் M.D. ஆனலின்

வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா? என கேள்வியெழுப்பினார் நிக்கதேம்.

ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று பதிலுரைக்கிறார் இயேசு.

நிக்கதேமுவுக்கு இயேசு சொன்ன “மறுபிறப்பு” வெறுமனே உடலியல் சார்ந்ததன்று, அது உளவியல் சார்ந்தது. இயேசுவின் “மறுபிறப்பு” பற்றிய பார்வையை நிக்கதேம் வெறும் வார்த்தைப் பொருளாகப் பார்த்தார். அது வாழ்க்கைப் பொருளாகப் பார்க்கப்பட வேண்டியது. ஆதவன் ஒவ்வொரு நாளும் புதிதாய்ப் பிறக்கின்றது. ஒரே ஆதவன்தான். ஆனால் ஒவ்வொரு நாளும் அது வீசும் ஒளிக்கீற்றுகள் பிரசவிக்கும் சக்தி ஒட்டுமொத்த

பிரபஞ்சத்திற்கு உயிரூட்டுகின்றதல்லவா. அவ்வாறே ஒவ்வொரு மனிதரும் ஓர் ஆதவனாக வேண்டும். ஒவ்வொரு துளி தண்ணீரும் உயிரளிக்கும் உத்வேகம் கொண்டது.

அது வாழ்வளிக்கும் சக்திமிக்கது. அவ்வாறே தூய ஆவியார் நல்லனவற்றை எண்ணவும், சொல்லவும், செய்யவும் வல்லமை வழங்குபவர். தண்ணீரின் சக்தியும் தூய ஆவியாரின் வல்லமையும் ஒருவரை ஆட்கொள்ளும்போது அவர் புதிதாய்ப் பிறக்கிறார். அது வெறும் உடல் சார்ந்த பிறப்பல்ல, புத்துணர்வும், புதுப்பார்வையும், புதுச்செயல்பாடுகளும் சூழ்ந்த

புதுப்பிறப்பு. அதுவே இயேசு விரும்பும் இறையாட்சி. அந்த ஆட்சிக்குள் அகிலம் அனுதினம் இயங்க வேண்டுமென்பதே இயேசுவின் கனவு. புதிய குழந்தை, புதிய கருத்துகள், புதிய கண்டுபிடிப்புக்கள் எல்லாமே புதிய நம்பிக்கையின் அறிகுறிகள்.

இறைவா! நீர் ஒவ்வொரு நொடியும் இந்த உலகைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றீர். அதோடு என்னையும்தான் என்றுணர வரம் தாரும்.

(‘உம் வாக்கின் வழியிலே...’ என்னும் புத்தகத்திலிருந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 February 2024, 13:20