தேடுதல்

தாவீதை அரசராக்க கடவுள் விருப்பம் தாவீதை அரசராக்க கடவுள் விருப்பம்  

தடம் தந்த தகைமை : தாவீதை திருப்பொழிவு செய்ய கடவுள் விருப்பம்!

ஆண்டவர் கட்டளையிட்டவாறு, தாவீதை இஸ்ரேல் மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்ய, சாமுவேல் பெத்லகேமுக்குச் சென்றார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆண்டவர் சாமுவேலை நோக்கி, “இஸ்ரயேலின் அரசராகச் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறக்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுடாடுவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்; ஏனெனில், அவன் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன்” என்றார். அதற்குச் சாமுவேல், “எப்படிப்போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே?” என்றார்.

மீண்டும் ஆண்டவர், “நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! ‘ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன்’ என்று சொல்; ஈசாயைப் பலிக்கு அழைத்திடு. அப்போது நீ செய்யவேண்டியது என்னவென்று உனக்கு நான் தெரிவிப்பேன்; நான் உனக்குக் காட்டுகிறவனை நீ எனக்காகத் திருப்பொழிவு செய்” என்றார். ஆண்டவர் கட்டளையிட்டவாறு, தாவீதை இஸ்ரேல் மக்களின் அரசராகத் திருப்பொழிவு செய்ய, சாமுவேல் பெத்லகேமுக்குச் சென்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2024, 12:15