தேடுதல்

திருவருகைக் காலம் துவங்குகின்றது திருவருகைக் காலம் துவங்குகின்றது 

திருவருகைக்காலச் சிந்தனை : பகைவருக்கு இறைவேண்டல்

பகைவரை அன்புகூர்வது பலருக்கு கடினமானதுதான். அதற்கு, இயேசு, சிறந்ததொரு வழியை, நமக்குக் காட்டுகிறார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

"பகைவரையும் அன்பு கூருங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காக செபியுங்கள்" என்பது கிறிஸ்தவத்திற்கே உரிய தனித்தன்மை எனலாம். எல்லா மதங்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டு இயங்கினாலும், அதற்கும் ஒருபடி மேலேச் சென்று, பகைவரையும் அன்புகூர அழைப்பு விடுக்கிறது, கிறிஸ்தவம். கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பது சமுதாயச் சட்டமாகவே அங்கீகரிக்கப்பட்டிருந்த காலத்தில், ஒரு கன்னத்தில் அறைந்தவருக்கு, அடுத்த கன்னத்தையும் காட்டச்சொல்லி, பெரும் புரட்சி செய்தவர் இயேசு. 'தந்தையே, இவர்களை மன்னியும்', என, இயேசு, சிலுவையில் கூறிய வார்த்தைகள், கிறிஸ்தவத்தின் முதல் மறைசாட்சியாகிய புனித ஸ்தேவான் தொட்டு, நம் அனைவரிலும் தொடரவேண்டும் என்பதே, கிறிஸ்துவின் விருப்பம். ஏனெனில், நம்மை அன்புகூர்பவர்களையே நாமும் திருப்பி அன்புகூர்ந்தால், அதனால் என்ன பலன்?  நம் பகைவருக்கு நாம் அன்புகாட்டவில்லையென்றால், கிறிஸ்துவின் சீடர்கள் என்று நம்மை எப்படி நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்? பகைவரை அன்புகூர்வது பலருக்கு கடினமானதுதான். அதற்கு, இயேசு, சிறந்ததொரு வழியை, நமக்குக் காட்டுகிறார். ஆம். 'உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்' என பரிந்துரைக்கிறார். நம்மை வெறுத்து நம் வெறுப்புக்கும் உள்ளாகுவோருக்காக நாம் இறைவேண்டல் செய்யும்போது, முதலில் நம் மனம் தூய்மையடையும், அமைதியடையும், அதன் வழி பகைவரை நோக்கிச் சென்று கைகுலுக்க வழிபிறக்கும். அந்த அமைதி வழியில் பயணிக்க இந்த திருவருகைக் காலம் நமக்கு உதவட்டும்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2021, 13:17