மேரி தெரேசா – வத்திக்கான்
கொரோனா தொற்றுக்கிருமியின் அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளிலே தங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வேளையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு எஸ்.அந்தோனிசாமி அவர்களின் ஆறுதலும் ஊக்கமும் தரும் வார்த்தைகள். இந்நாள்களில் ஆலயங்களில் திருப்பலிகள் இல்லை. ஆனால் அருள்பணியாளர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் திருப்பலி நிறைவேற்றி ஒவ்வொரு குடும்பங்களுக்காகச் செபிக்கின்றனர் என்று, ஆயர் அந்தோனிசாமி அவர்கள் கூறியுள்ளார்