தேடுதல்

தாய்லாந்தில் மருத்துவம் தாய்லாந்தில் மருத்துவம் 

நேர்காணல் – வர்மக்கலை மருத்துவர் அ.சகோ.ஆனி கிறிஸ்டினா

திருச்சி, மரியின் ஊழியர் சபையின் மறைந்த அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள், தான் படித்த வர்மக்கலை மருத்துவத்தால், நடக்க முடியாத பலரை நடக்க வைத்துள்ளார்

மேரி தெரேசா - வத்திக்கான்

திருச்சி, மரியின் ஊழியர் சபை அருள் சகோதரியான ஆனி கிறிஸ்டினா அவர்கள் வர்மக்கலை, இயற்கை மருத்துவம், நாடி மருத்துவம் போன்றவற்றில் சிறந்து விளங்கியவர். இந்தியா மட்டுமல்லாமல், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்தும் மக்கள் இவரிடம் வந்து அற்புதமாய் குணம்பெற்றுச் சென்றுள்ளனர். சிவகங்கை நகருக்கு அருகில் முத்துப்பட்டி, கொடைக்கானல், மதுரை போன்ற மரியின் ஊழியர் சபை இல்லங்களில் மருத்துவப் பணியாற்றியுள்ளார். ஐம்பது வயதேயான அருள்சகோதரி ஆனி கிறிஸ்டினா அவர்கள் கடந்த அக்டோபர் 6ம் தேதி, திடீரென இவ்வுலகைவிட்டு மறைந்தார். இவர் கொடைக்கானலில் தனது மருத்துவப்பணிகள் பற்றி அண்மையில் பகிர்ந்துகொண்டதை இன்று ஒலிபரப்புகின்றோம்

நேர்காணல் – வர்மக்கலை மருத்துவர் அ.சகோ.ஆனி கிறிஸ்டினா

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2018, 14:33