தேடுதல்

பிலிப்பீன்ஸ் கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே பிலிப்பீன்ஸ் கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

தாக்குதலில் ஈடுபடுவது, பொய் கடவுளை பின்பற்றுவோரின் வழி

கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள், சிலுவையைச் சுமந்து அவரைப் பின்தொடரவேண்டும் - பிலிப்பீன்ஸ் கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே

லூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில் எழும் கருத்து வேறுபாடுகளை, மோதல்கள் வழியே தீர்ப்பதற்குப் பதில், கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள், சிலுவையைச் சுமந்து அவரைப் பின்தொடரவேண்டும் என்று பிலிப்பீன்ஸ் கர்தினால், லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் கூறினார்.

அண்மையில் கொண்டாடப்பட்ட கார்மேல் அன்னை திருநாளையொட்டி, மணிலாவில் உள்ள புனித செபாஸ்தியான் துணை பசிலிக்காவில் திருப்பலியாற்றிய மணிலா பேராயர், கர்தினால் தாக்லே அவர்கள், தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.

அண்மைய மாதங்களில் கத்தோலிக்கத் திருஅவை பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானாலும், இவற்றிற்கு பதிலிறுப்பாக, கிறிஸ்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபடுவது, பொய்யான கடவுளை பின்பற்றுவோரின் வழி என்று, கர்தினால் தாக்லே அவர்கள் தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

மணிலாவில் உள்ள புனித செபாஸ்தியன் துணை பசிலிக்காவிற்கு, கார்மேல் அன்னையின் திரு உருவம் வந்து சேர்ந்த 400ம் ஆண்டு, இவ்வாண்டு நடைபெற்ற கார்மேல் அன்னை திருநாளன்று சிறப்பிக்கப்பட்டது என்று ஆசிய செய்தி கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 July 2018, 14:47