ஜெர்மனியில் இலையுதிர் கால மரங்கள் ஜெர்மனியில் இலையுதிர் கால மரங்கள் 

விதையாகும் கதைகள்: துளிர்விடுவது தன்னம்பிக்கை தரும்

இலைகள் விழுந்தால் என்ன? வேர்கள் இருக்கின்றனவே. எப்பொழுதும் வேர்களைத் தேடிச்செல்வோம்

மேரி தெரேசா: வத்திக்கான்

அது இலையுதிர் காலம். அந்த புல்வெளியில் மரம் மொட்டையாய் நின்றது. அந்த இடத்தில் புல்மேய்ந்த மாடு ஒன்று, அந்த மரத்திடம், உன் இலைகள் விழுந்துகொண்டிருக்கின்றன, உன்னைப் பார்த்தால் அழவேண்டும்போல் இருக்கிறது... என்று தழுதழுத்த குரலில் கூறியது. அதற்கு மரம், நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. புதிய தளிர்களுக்காக அவை விழத்தான் வேண்டும் என்று சொல்லி நிமிர்ந்து நின்றது. தொடர்ந்து மரம் சொன்னது – விழுவதெல்லாம் அழுவதற்கில்லை என்று. (நன்றி காசி ஆனந்தன் கதைகள்).

இலைகள் விழுந்தால் என்ன? வேர்கள் இருக்கின்றனவே. எப்பொழுதும் வேர்களைத் தேடிச்செல்வோம்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 December 2020, 14:40