விதையாகும் கதைகள் : தலைகனம் தரும் தவிப்பு
'உனக்குத் தலைக்கனம் அதிகம். அதனால், சும்மா இருக்கும் என்னிடம், வலிய வந்து உரசிப் பார்க்கிறாய். எரிந்துபோகிறாய்' என்று, தீப்பெட்டி, தீக்குச்சியிடம் சொன்னது.
ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்
பலநாளாக கேட்கவேண்டும் என்று எண்ணியிருந்த கேள்வியை, தீக்குச்சி, அன்று தீப்பெட்டியிடம் கேட்டது: 'நாம் இரண்டு பேரும் உரசுகிறோம். ஆனால், நான் மட்டும் பற்றி எரிகிறேனே, ஏன்?', என்று தீக்குச்சி கேட்டது.
'உனக்குத் தலைக்கனம் அதிகம். அதனால், சும்மா இருக்கும் என்னிடம், வலிய வந்து உரசிப் பார்க்கிறாய். எரிந்துபோகிறாய்' என்று தீப்பெட்டி பதில் சொன்னது.
தலைகனம் மிகுந்தால், அந்த தலைகனத்துடன் மற்றவர்களை உரச விழைந்தால், தணலாகித் தவிக்க வேண்டியிருக்கும். தணிந்தால், பணிந்தால், தவிப்பின்றி வாழமுடியும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
25 April 2020, 13:44