Beekse Bergen safari பூங்காவில் புலிகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து Beekse Bergen safari பூங்காவில் புலிகளுக்கு கிறிஸ்மஸ் விருந்து 

விதையாகும் கதைகள்: அன்பிற்கு தடை என்பதில்லை

ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஊருக்கு ஒதுக்குப்புறமாக, ஒரு குகையில் வாழ்ந்துவந்த, அந்த துறவியிடம் பெண் ஒருவர் சென்று, தன் கணவர் போருக்குப் போய் வந்ததிலிருந்து, தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக் கூறி, அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டார். துறவி கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல், அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார் துறவி. மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றார். புலியைக் கண்டார். அது உறுமியது. பயந்து வந்து விட்டார். மறுநாளும் சென்று புலியைக் கண்டார். இன்றும் புலி உறுமியது. இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் அருகில் செல்ல பயமாக இருந்ததால் அப்பெண் திரும்பி விட்டார். அப்பெண் ஒவ்வொரு நாளும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அப்பெண் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது. புலி முடியை ஓடிச் சென்று துறவியிடம் கொடுத்தார் அப்பெண். துறவி அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுவிட்டார். அதைப் பார்த்த அந்தப் பெண் மனம் குழம்பி நின்றார்.

இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?'' என்று துறவி கூறினார். துறவியின் பேச்சு, அப்பெண்ணின் மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவராக வீடு திரும்பினார் அப்பெண்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 January 2020, 14:47