தூரின் புத்தகக் கண்காட்சியில் வத்திக்கான் பதிப்பக புத்தகங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
தூரினில் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் திருத்தந்தையின் தற்போதைய ஆப்ரிக்கத் திருத்தூதுப் பயணம், அருள்பணியாளர் லொம்பார்தியுடன் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களின் நினைவு, சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த கெயில் ஜிராட் மற்றும் கார்லோ பெட்ரினிக்கு இடையேயான உரையாடல் பற்றிய புத்தகங்களும் நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.
மே 18 முதல் 22 வரை தூரினில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் பல்வேறு தலையங்கங்கள், புதிய புத்தக ஆசிரியர்களின் சந்திப்புகள், காங்கோ மற்றும் தெற்கு சூடான் ஜனநாயகக் குடியரசுக்கான தற்போதைய திருத்தூதுப் பயணத்தில் திருத்தந்தையில் அனைத்து உரைகள், மக்களின் அனுபவப் பகிர்வுகள் போன்றவையும் இடம்பெற உள்ளன.
நைஜீரிய எழுத்தாளரான சிமாமண்டா என்கோசி அடிச்சியின் முன்னுரை கொண்டு உருவாக்கப்பட்ட இப்புத்தகத்தின் சில பகுதிகள், மே 22 திங்கட்கிழமை மாலை கம்போனி மறைப்பணியாளரான அருள்பணி அலெக்ஸ் ஜானோடெல்லி, ராய் செய்தித்தொடர்பாளர், மத்தேயோ ஸ்பிகுக்லியாவுடன் இணைந்து நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன.
சுற்றுச்சூழல் மாற்றத்தின் இனிமையான புரட்சி மற்றும் அதன் முன்மொழிவை எதிர்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் திருத்தந்தையின் இறைவா உமக்கே புகழ்!’(Laudato si') என்ற திருமடலான பின்னணியில் ஒரு உறுதியான பாதையை ஆராய்ந்து முன்மொழியும் புத்தகங்கள், நமது காலத்திற்கான திருஅவையின் பயணப்பாதையைக் கண்டறியும் திருத்தந்தை பிரான்சிஸ அவர்களின் இரண்டு திருமடல்களான Fratelli tutti மற்றும் Laudato si' ஆகியவற்றின் ஊக்கமளிக்கும் கொள்கைகளைப் பற்றிய புத்தகங்களும் நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்