மறைப்பணி ஞாயிறன்று வத்திக்கானில் மறைப்பணி ஞாயிறன்று வத்திக்கானில் 

"மறைபரப்புப்பணியின் பொருள் இதுதான்"

"திருமுழுக்கின் வழியே நாம் பெற்ற புது வாழ்வு, மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய மாபெரும் செல்வம். மறைபரப்புப்பணியின் பொருள் இதுதான்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நடைபெறும் அக்டோபர் மாதம் 'சிறப்பான மறைபரப்புப்பணி மாத'மாக கடைபிடிக்கப்படுவதையொட்டி, மறைபரப்புப்பணியின் மற்றுமொரு பரிமாணத்தை விளக்கும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று #ExtraordinaryMissionaryMonth என்ற ‘ஹாஷ்டாக்’குடன் தன் டுவிட்டர் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

"திருமுழுக்கின் வழியே நாம் பெற்ற புது வாழ்வு, மற்றவர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய மாபெரும் செல்வம். மறைபரப்புப்பணியின் பொருள் இதுதான்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார் திருத்தந்தை.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

அக்டோபர் 24, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 2,172 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 81 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram தளத்தில், இதுவரை வெளியான புகைப்படங்கள், மற்றும், காணொளிகள், 778 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 63 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 October 2019, 14:35