திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

மனித உயிரை மதிக்கும் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

"கடவுளின் பார்வையில், மனித வாழ்க்கை விலைமதிப்பற்றது, புனிதமானது மற்றும் ஒருபோதும் துன்புறுத்தப்படக்கூடாதது. யாரும் தங்கள் சொந்த உயிரையோ, பிறரது உயிர்களையோ அவமதிக்கக்கூடாது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உயிர்கள் மதிப்பு மிக்கவை என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 22, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"கடவுளின் பார்வையில், மனித வாழ்க்கை விலைமதிப்பற்றது, புனிதமானது மற்றும் ஒருபோதும் துன்புறுத்தப்படக்கூடாதது. யாரும் தங்கள் சொந்த உயிரையோ, பிறரது உயிர்களையோ அவமதிக்கக்கூடாது" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

ஒவ்வொரு நாளும் @pontifex என்ற வலைத்தள முகவரியில் திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

நவம்பர் 22, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 1.766 என்பதும், அவரது செய்திகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 78 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இத்துடன், @franciscus என்ற பெயரில் இயங்கிவரும் instagram முகவரியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி, அவ்வப்போது வெளியிடப்பட்டு வரும் படங்கள் மற்றும் காணொளிகள், இதுவரை 623 என்பதும், அவற்றைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை 57 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2018, 14:45