கோவிட்-19 காலத்தில் தமிழகம் கோவிட்-19 காலத்தில் தமிழகம் 

நேர்காணல்: கோவிட்-19ல் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் -2

கொரோனா கொள்ளைநோய் பரவல் காலத்தில், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம், சமுதாய ஊடகங்கள் வழியாக பல்வேறு இளைஞர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழக இளைஞர்களும், இப்போதைய ஊரடங்கில் பல்வேறு நற்பணிகளை ஆற்றி வருகின்றனர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

தமிழக ஆயர் பேரவை 2020ம் ஆண்டை இளைஞர் ஆண்டாக அறிவித்து சிறப்பித்து வருகிறது. இப்போதைய கொரோனா கொள்ளைநோய் பரவலைத் தடுப்பதற்கு, அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் இந்த இளைஞர் ஆண்டில் செயல்படுத்தப்படவேண்டிய திட்டங்கள் தேக்கநிலையில் உள்ளன என்று சொல்லலாம். ஆயினும், தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம், சமுதாய ஊடகங்கள் வழியாக பல்வேறு இளைஞர் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழக இளைஞர்களும், இப்போதைய ஊரடங்கில் பல்வேறு நற்பணிகளை ஆற்றி வருகின்றனர். இவை பற்றி தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் இயக்குனர் அருள்பணி மபா.மார்ட்டின் ஜோசப் அவர்கள், பகிர்ந்துகொண்டதை இன்று வழங்குகிறோம்.

கோவிட்-19ல் தமிழகக் கத்தோலிக்க இளைஞர் இயக்கம் -2

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 July 2020, 12:45