நேர்காணல் – பயங்கரவாதத்தால் தாக்கப்பட்டுள்ள இலங்கை
மேரி தெரேசா - வத்திக்கான்
இயேசுவின் உயிர்ப்பு, கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆணிவேர். இப்பெருவிழா திருவழிபாடுகளின்போது இலங்கையில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத குண்டுவெடிப்புகள், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, மியன்மார், தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகள் உட்பட, உலகின் ஏறத்தாழ எல்லா நாடுகளின் சமயத் தலைவர்கள், தங்களின் கடும் அதிர்ச்சி மற்றும் வேதனையைத் தெரிவிக்கும் கடிதங்களை, இலங்கை ஆயர்களுக்கும், அரசுத் தலைவருக்கும் அனுப்பியுள்ளனர். தங்களின் செபம் நிறைந்த ஒருமைப்பாட்டுணர்வையும் இத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கொடூர நிகழ்வு குறித்து, நீர்கொழும்புவில் பணியாற்றும் கிளேரிசியன் துறவு சபை அருள்பணி கான்ஸ்ட்டைன் அவர்கள், தொலைபேசி வழியாக வத்திக்கான் வானொலி நேயர்களுக்கு தெரிவித்த தகவல்கள் இதோ..
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்