நேர்காணல்: தமிழ் இலக்கிய உலகில் சாதனை பெண் முனைவர் மரிய தெரேசா
முனைவர் மரிய தெரேசா அவர்கள், தமிழ் இலக்கிய உலகில் சாதனைப் படைத்து வருபவர். கின்னஸ் சாதனை நோக்கி சென்றுகொண்டிருப்பவர். சென்னையில் ஆவடி விஜயந்தா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகவும், திருமுல்லைவாயில் ரங்கசாமி கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றிருப்பவர். 2020ம் ஆண்டு நவம்பரில், தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருதையும் பெற்றிருப்பவர். தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளில் புலமை பெற்றிருக்கும் இவர், கைக்கூ, எதுகைக்கூ, மோனைக்கூ என ஒருவரிக் கவிதைகள், சிறுகதை, நாவல்கள் போன்ற 248 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பன்முகத் திறமை கொண்ட முனைவர் மரிய தெரேசா அவர்கள், 134 விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்