விதையாகும் கதைகள் : விருந்தாளியாக வந்திருக்கிறேன்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்
துறவி ஒருவரைப் பார்க்க நீண்ட தூரத்திலிருந்து ஒருவர் வந்தார். துறவி தங்கியிருந்த குடிலில் ஒரு பொருளும் இல்லை.
வந்தவர் வியப்புடன் கேட்டார், “உங்களுக்கென்று பொருள் எதுவும் கிடையாதா?”
துறவி சிரித்துக்கொண்டே, “உங்கள் பார்வையில் அப்படித்தான் தோன்றும். பரவாயில்லை, அதே கேள்வியை நான் உங்களிடம் இப்போது கேட்கலாம் அல்லவா? ஏனெனில் உங்களிடமும் தற்போது எந்தப் பொருளும் இல்லையே?” என்று கேட்டார்.
வந்தவர் சொன்னார், “நான் உங்களைத் தேடி வந்த விருந்தாளி. இங்கு சிறிது நேரம் மட்டுமே இருப்பேன். அதனால் நான் எதையும் கொண்டு வரவில்லை''
துறவி அப்போது சொன்னார், “உங்களைப்போலத்தான் நானும் இவ்வுலகிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறேன். நானும் சிறிது காலம்தான் இங்கே இருப்பேன். எனவே தேவையில்லாத பொருட்கள் எனக்கு எதற்கு?”
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்