இந்தியாவில் மது வாங்க காத்திருக்கும் கூட்டம் இந்தியாவில் மது வாங்க காத்திருக்கும் கூட்டம்  

விதையாகும் கதைகள்: பழக்கவழக்கங்களுக்கு நாம்தான் அடிமை

மதுபோதைக்கு அடிமையானோர், போதைப் பழக்கத்தைக் கட்டிக்கொண்டு நிற்பதாலேயே, அது நம்மைக் கட்டி வைத்திருக்கிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மதுபோதைக்கு அடிமையான ஒருவர் ஒருமுறை, ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்திற்கு வந்தார். "நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள் ஐயா...'' என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு ஞானி, ""நாளை மாலை என்னை வந்து பார், சொல்கிறேன்'' என்று அனுப்பி வைத்தார்.
மறுநாள் மாலை, அவர் ஞானியைத் தேடி வந்தபோது, ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நிற்பதைக் கண்டார். தூணைப் பார்த்து, "ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார் ஞானி.
மதுபோதைக்கு அடிமையான அந்த நபர் ஞானியை நோக்கி, "நீங்கள்தானே தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டுவிடுங்கள்'' என்றார்.
உடனே ஞானி சிரித்துக்கொண்டே, ""நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல, நீதான் குடிப்பழக்கத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறாய், அதனால் அப்பழக்கத்தை நீயே விட்டுவிடு'' என்று கூறினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 May 2020, 14:14