தேடுதல்

பனியில் விளையாடும் குழந்தை பனியில் விளையாடும் குழந்தை 

விதையாகும் கதைகள் : கர்வம் தந்த வெட்கம்

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர், பூங்காவில் ஒரு குழந்தையோடு விளயாடியதால் யாருக்கு பெருமை?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

உலகப்புகழ் பெற்ற இரஷ்ய எழுத்தாளர், லியோ டால்ஸ்டாய் அவர்கள், ஒருநாள் பூங்காவில் அமர்ந்திருந்தார். அப்போது, ஒரு பந்துடன் அங்கு வந்த ஒரு சிறுமி, டால்ஸ்டாய் அவர்களிடம், ‘என்னோடு விளையாட வருகிறீர்களா..?’ என்று கேட்டாள். அவரும் ஒப்புக்கொண்டு, அச்சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடினார். மாலை நெருங்கவே, அச்சிறுமி டால்ஸ்டாய் அவர்களிடம், ‘நான் போய் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினாள். அதைக் கேட்ட டால்ஸ்டாய் அவர்கள், ‘உன் அம்மாவிடம் சொல், நான் இன்று டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று’ என்றார். அதற்கு அந்தச் சிறுமி, ‘நீங்களும், உங்கள் அம்மாவிடம் சொல்லுங்கள், நான் மேரியுடன் விளையாடினேன் என்று’ என்றாள்.

உலகப் புகழ்பெற்ற தன்னை, அவள் தனக்கு இணையாக நினைத்ததை உணர்ந்து, டால்ஸ்டாய் அவர்கள், தன் கர்வத்துக்காக வெட்கப்பட்டார்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 February 2020, 13:42