பாக்தாத்தில் அரசு எதிர்ப்பாளர்களின் பிம்பங்கள் தண்ணீரில் பிரதிபலிப்பு பாக்தாத்தில் அரசு எதிர்ப்பாளர்களின் பிம்பங்கள் தண்ணீரில் பிரதிபலிப்பு 

விதையாகும் கதைகள்: மனதைக் குழந்தையைப் போல் வைத்திருப்போம்

நம்மை சுற்றியிருக்கும் உலகம் ஒரு கண்ணாடி. நல்லதும், கெட்டதும், நம்மிடமிருந்து பெற்று பிரதிபலிக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

முனிவர் ஒருவரிடம், செல்வந்தர் ஒருவர் வந்து, "என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உள்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை" என்றார். அவரைப் பார்த்து, புன்னகைத்த குரு, கதை ஒன்றைச் சொன்னார்...

"ஓர் ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை ஒன்று இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங்களும் கை தட்டின. உலகிலேயே மகிழ்ச்சியான இடம் இதுதான்! என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள். அதே இடத்துக்கு ஒருநாள், கடுங்கோபம் கொண்டிருந்த ஒருவர் வந்தார். தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டார். அச்சம் கொண்ட அவர், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கியவுடன், ஆயிரம் பிம்பங்களும் அவரை அடிக்க கை ஓங்கின. உலகிலேயே மோசமான இடம் இதுதான், எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினார்", என முனிவர் கூறினார். பின்னர், செல்வந்தரை நோக்கி, "இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு. உலகம் உனக்கு சொர்க்கமாகும்," என்றார் முனிவர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 January 2020, 12:00