தேடுதல்

மகிழ்வுடன் இருக்கும் குழந்தைகள் மகிழ்வுடன் இருக்கும் குழந்தைகள் 

வாரம் ஓர் அலசல் – வளமாக, நலமாக வாழ...

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற மூன்று பேர் – நான் யார் என்று நினைக்கின்றேனோ அந்த ‘நான்’, மற்றவர் என்னை யார் என்று நினைக்கின்றார்களோ அந்த ‘நான்’, இந்த இரண்டிற்கும் இடையில் இருக்கும் உண்மையான ‘நான்’

மேரி தெரேசா – வத்திக்கான் & அ.பணி அருள்சிவன் சே.ச.

உலகில் வாழ்கின்ற நாம் ஒவ்வொருவரும் விரும்புவது, நலமாக இருக்க வேண்டும், வளமாக வாழ வேண்டும், நோய்நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே. அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எப்படி நாம் நலமாக இருக்கின்றோமோ, அதைப்போல, மற்றவர்களும் வளமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவ வேண்டுமோ அப்படியெல்லாம் உதவினால் நிச்சயமாக, நாமும் நலமாக இருப்போம். மற்றவர்களும் வளமாக இருப்பார்கள்...  நாம் நமது குறைவு நிறைவுகளோடு ஏற்று வாழ்ந்தால், நலமாக இருப்போம்... இவ்வாறு தன் சிந்தனை முத்துக்களை, வத்திக்கான் வானொலி அன்புள்ளங்களுடன் பகிர்ந்து கொள்கிறார், அருள்பணி அருள்சிவன் சே.ச. இவர், இயேசு சபை மதுரை மாநிலத்தில், இயேசு சபையினரை உருவாக்கும் பணியை ஆற்றி வருகின்றார்.

அ.பணி அருள் சிவன் சே.ச.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 December 2019, 15:52