பலவித கீரைகள் பலவித கீரைகள் 

பூமியில் புதுமை : வாழ்வை வளமாக்கும் கீரைகள்

கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது, உடலில் வைட்டமின் ஏ வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெயர் பெற்றவை, அறக்கீரை, பாலக் கீரை, தண்டு கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை, மற்றும், புதினா தழை போன்றவையாகும். கீரைகள், குறிப்பாக, இரும்பு மற்றும் பிற தாதுப்பொருட்களை அதிகளவில் கொண்டுள்ளன. இரும்புச் சத்து பற்றாக்குறை, இரத்த சோகையினை ஏற்படுத்துகிறது. கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் வழியாக, இரத்த சோகை வருவதைத் தடுத்து, நல்ல உடல் நலனைப் பெறலாம். கீரைகள் சண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி போன்றவற்றை அதிகம் கொண்டுள்ளன.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும், ஐந்து வயதிற்குட்பட்ட ஏறக்குறைய 30,000 குழந்தைகள் வைட்டமின் ஏ குறைப்பாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் எனும் பொருளானது, உடலில் வைட்டமின் ஏ-வாக மாறுவதால், பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது. கீரைகளிலுள்ள கரோடின்களைப் பாதுகாக்க, நீண்ட நேரம் வேகவைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரைகளில் உள்ள கரோடின் எனும் சத்துப்பொருள் இழப்பு ஏற்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2019, 16:37