இமயமாகும் இளமை : பள்ளி நடத்தும் கிராம இளைஞர்கள்
சிவகங்கை அருகே, வடக்கு தமறாக்கியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. தனியார் பள்ளி ஆர்வத்தால் மாணவர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது. இதைத் தடுக்க, கிராம இளைஞர்கள் தமறாக்கி நாட்டு வேங்கைகள் என்ற பெயரில் 'வாட்ஸ்ஆப்' குழுவைத் துவங்கினர். இதன் மூலம் பணம் வசூலித்து, பள்ளியை சீரமைத்தனர். பள்ளிக்கு வர்ணம் அடித்து புதுப்பித்தனர். பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், புரஜெக்டர் உள்பட வசதிகளைச் செய்தனர். மேலும், இளைஞர்கள் பாலர் பள்ளியையும் நடத்தி வருகின்றனர். அங்கு 37 குழந்தைகள் படிக்கின்றனர். அங்கும் தேவையான வசதிகள், நோட்டு, புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தனர். இங்கு பணியாற்றும் மூவருக்கு ஊதியமும் வழங்குகின்றனர். இதனால் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. தற்போது 113 பேர் படிக்கின்றனர். இந்த இளைஞர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இரமேஷ் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார். பாலர் பள்ளி துவங்கியதால், அரசு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது தடுக்கப்பட்டது. பள்ளி வளர்ச்சிக்காகவே 'வாட்ஸ்ஆப்' குழுவை ஏற்படுத்தினோம். அதில் அறுபது பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதிலுள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்கின்றனர். நடுநிலைப் பள்ளியும் தனியாருக்கு நிகராக மாற்றப்பட்டு வருகிறது என்று இரமேஷ் அவர்கள் கூறினார். (தினமலர்)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்